கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வென்டிலேட்டருடன் கூடிய படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து ஒரு சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வென்டிலேட்டர், ஆக்சிஜன் படுகைகளை நோயாளிக்கு தருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி புனேவில் 3 டாக்டர்கள் ஒரு நோயாளியின் உறவினர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் வாங்கிக் கொண்டு வென்டிலேட்டர் படுக்கையை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து மூன்று டாக்டர்கள் கைது செய்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.