வீட்டின் மீது மோதிய விமானம்: பலியானவர்கள் எத்தனை பேர்?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யோர்பா லிண்டா என்ற நகரின் மேல் சிறியரக விமானம் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? உயிரிழந்தவர்கள் யார்? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.