விஷால் பட தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம்: ஏன் தெரியுமா?
ஒரு தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷாலின் எண்ணமாக உள்ளது.
ஆனால் அவர் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் பல லட்சங்கள் நஷ்டம் அடைந்தது ஏன்?
விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக ராஷிகண்ணா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அயோக்யா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த 6ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூனிமேடு மசூதி அருகே நடைபெற திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் படக்குழுவினர் முறையாக பெற்றிருந்தனர்.
ஆனால் டிசம்பர் 6ஆம் தேதி பாபரி மசூதி இடிக்கபட்ட நினைவு நாள் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்க கூடாது என்று கருதி காவல் துறையினர் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் அயோக்யா படத்தயாரிப்பாளருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டமாகியுள்ளதாக தயாரிப்பு வட்டங்கள் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.