விரைவில் அதிமுகவிற்கு பெண் தலைவர்: அமைச்சர் செல்லூர் ராஜு
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவி காலியாக உள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் ஈபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும் என்றும், ஆண்களுக்கு நிகராக அதிமுகவை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான் என்றும் மதுரையில் நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
தற்போது அதிமுகவின் தலைமையை ஏற்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க பெண் தலைவர் இல்லாத நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ யாரை மனதில் வைத்து இதனை கூறினார் என்பது தெரியவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.