shadow

வியட்நாமில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 37 ஆனது

வியட்நாம் நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. இதனால் வியட்நாம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வியட்நாம் பேரிடர் மீட்புப்படையினர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நோயன் மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேரும், யென்பாய் உள்ளிட்ட பிற மாகாணங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி மாயமான 40 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 18,000-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையில் சிக்கி 8,000 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் 40,000க்கும் மேற்பட்ட விலங்குகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply