shadow

விநாயகர் நோன்பு இருந்தால் விருத்தி தானாக வரும்

திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வந்தால் தனவிருத்தி, தான்ய விருத்தி கிடைக்கும்.

திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரியை தனியாக எடுத்து வைக்க வேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில், ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்துவகை பொரி (நெல் பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள் பொரி, கம்பு பொரி) வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டியில் பணியாரம் செய்து நைவேத்தியமாக படைத்து கணபதியை வழிபட வேண்டும். 21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி, மாவிளக்கு ஏற்ற வேண்டும்.

இந்த வழிபாட்டின் மூலமாக தனவிருத்தி, தான்ய விருத்தி கிடைக்கும்.

மார்கழி மாதம் 9-ம் நாள் (24.12.2017) ஞாயிற்றுக் கிழமை இந்த பிள்ளையார் நோன்பு வருகிறது.

Leave a Reply