சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறிப்பாக சென்னையில் நேற்று இரவு 12 மணி முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகலில் பலத்த மழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அண்ணா சாலை, அண்ணா நகர், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி, தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் நல்ல மழை பெய்தது.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, கரூர் மாவட்டம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply