விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது சரிதான்: சீமான்
நடிகர் விஜய் மீது கேரள அரசு வழக்குப்பதிவு செய்தது சரிதான் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த தீபாவளி தினத்தில் வெளியான விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் அவர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்திருப்பதாக குற்றஞ்சாட்டி கேரள நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,’ விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது சரிதான் என்று கூறினார்.
சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும், இதற்கு முன்மாதிரியாக இருந்த எம்ஜிஆர் அவர்களை அனைத்து நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்றும், தம்பி விஜய்யின் நன்மைக்காகவே இதனை தான் சொல்வதாகவும் சீமான் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.