விஜய் உருவாக்கிய சமாதானபுரம்!
விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அப்பா, மகன் என விஜய் இரண்டு கேரக்டர்களில் நடித்து வருகிறார். இதில் அப்பா விஜய்யின் பெயர் பிகில் என்பதும் மகன் விஜய் பெயர் மைக்கேல் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விஜய் இந்த படத்தில் வாழும் பகுதியின் பெயர் ‘சமாதானபுரம்’ என தெரிய வந்துள்ளது. அதாவது அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் பகுதி என்பதால் அந்த பகுதிக்கு விஜய்யே சமாதானபுரம் என மாற்றியதாகவும் கதையில் உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது
மேலும் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்களும், விளையாட்டு துறையில் உள்ள அரசியல் குறித்த பரபரப்பான வசனங்களும் இருப்பதாக கூறப்படுவதால் இந்த படம் ரிலீசாகும்போது அரசியல்வாதிகளால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.