தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்

அவரை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் இருவரும் தகுந்த சிகிச்சை எடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் அவரது உடல்நிலை குறித்தும் வதந்திகளும் பரவி வரும் நிலையில் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று இருப்பதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தயவுசெய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தெரிவித்துள்ளது

Leave a Reply