விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி என்ற பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த வேலைநிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து நாளை காலை முதல் விசைத்தறிகள் இயங்கும் என தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.