விக்ரம் லேண்டர் சேதம் அடையவில்லை: இஸ்ரோ தகவல்

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2, விண்கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், சந்திரனில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதன் பின் லேண்டர் என்ன ஆனது என்றே தெரியவில்லை

இந்த நிலையில் ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் இமேஜில் இருந்து விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தற்போது விக்ரம் லேண்டர் சேதம் அடையாமல் முழுமையாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவல் விஞ்ஞானிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்படுத்த வைக்க தேவையான முயற்சிகளை விஞ்ஞானிகள் எடுத்து வருகின்றனர்

Leave a Reply