விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால் கீழே வரமாட்டேன்: ரஜினிகாந்த் பிடிவாதம்
விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால் கீழே இறங்கி வரமாட்டேன் என்று யமுனை ஆற்றின் பாலம் ஒன்றின் தூணில் ஏறி நின்று கொண்டு ரஜினிகாந்த் என்பவர் பிரச்சனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயருடைய ஒருவர் நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயக்ராஜ் என்ற பகுதியில் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பில்லர் ஒன்றின் மேல் ஏறினார். கையில் தேசிய கொடியுடன் அவர் ஏறியதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்து கொண்டிருந்தனர்
இந்த நிலையில் இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை விஞ்ஞானிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.