விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியா? பெரும் பரபரப்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மட்டும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாக தயாராகி வருகிறது

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ள நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவினர் விருப்ப மனுக்களை கொடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக எம்பி கவுதம சிகாமணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த தொகுதியில் உதயநிதி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் பதவியை பெற்ற உதயநிதி ஸ்டாலின் அடுத்து எம்.எல்.ஏ ஆகவும், ஆட்சியைப் பிடித்தால் மந்திரியாகவும் ஆக வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply