வான்படை தாக்குதல்: மோடியின் விமர்சனத்திற்கு மம்தா பதிலடி!
இந்திய விமானப்படை நடத்திய வான் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டு, நம் நாட்டு படைவீரர்களின் துணிச்சலை எதிர்க்கட்சிகள் இழிவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்த நிலையில் இந்த விமர்சனத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, ‘நாட்டுக்காக ரத்தம் சிந்தி வீரமரணம் அடையும் வீரர்களின் தியாகத்தை வைத்து யாரும் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கக்கூடாது என்றும், படை வீரர்களின் இறப்பை அரசியலுக்காக பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும், பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கருத்து தெரிவித்தால் அவரை பாகிஸ்தான் ஆதரவாளராக சித்தரிக்கப்படுவது மோசமானது என்றும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.