shadow

வான்படை தாக்குதலை அடுத்து முப்படை தளபதிகள் திடிர் சந்திப்பு

நேற்று பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய வான்படை அதிரடியாக தீவிரவாதிகள் முகாம்களை தாக்குதல் செய்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பாகிஸ்தான் தாக்கினால் அதை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை முப்படைகளின் தளபதிகளான, பிபின்ராவத் (ராணுவம்), பி.எஸ். தனோவா (விமானப்படை), லம்பா (கடற்படை) உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் சில முக்கிய ஆலோசனைகள் செய்யப்படும் என கூறப்படுகிறது

Leave a Reply