வழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்!

வங்க கடலில் புயல் சின்னம் தோன்றி அது தமிழகத்தை நோக்கி வருவது போல் தெரிந்தாலும் திடீரென திசைமாறி ஆந்திரா மற்றும் ஒரிசா பக்கம் சென்று விடும் என்பதே நாம் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வரும் நிகழ்வுகளாகும்

அதனை அடுத்து தற்போது வங்க கடலில் புல்புல் என்ற புயல் உருவாகி வந்த நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது

இந்த நிலையில் தற்போது அந்தமான் அருகே நிலைகொண்டிருக்கும் புல்புல் புயல், வழக்கம்போல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால் புல்புல் புயலால் தமிழகத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார்

Leave a Reply