‘வர்மா’ படத்தில் இருந்து விலகியது ஏன்? பாலா விளக்கம்
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை கைவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஈ4 எண்டர்டெயின்மெண்ட் அறிவித்த நிலையில் பாலா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஒரிஜினல் கதை போல் உருவாக்கவில்லை என்றும், அதிக ஆபாச வன்முறை காட்சிகள் இருந்ததால் விக்ரம் இந்த படத்தை வெளியிட விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாலா இந்த படத்தில் இருந்து தான் விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றேன். படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு.. துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை
இவ்வாறு பாலா தனது அறிக்கையில்
Leave a Reply
You must be logged in to post a comment.