shadow

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் எந்தெந்த கடைகள் மட்டும் திறந்து வைக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

* மருந்தகங்கள்‌, நாட்டு மருந்து கடைகள்‌, கால்நடை மருந்தகங்கள்‌

* பால்‌ விநியோகம்‌, குடிநீர்‌ மற்றும்‌ தினசரி பத்திரிக்கை விநியோகம்‌

* பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள்‌, பழங்கள்‌, தோட்டக்கலைத்‌துறை மூலமாக சென்னை நகரத்திலும்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன்‌ இணைந்து வாகனங்கள்‌
மூலமாக வழங்கப்படும்‌

* தலைமைச்‌ செயலகத்திலும்‌, மாவட்டங்களிலும்‌, அத்தியாவசியத்‌ துறைகள்‌ மட்டும்‌ இயங்கும்‌

* தனியார்‌ நிறுவனங்கள்‌, வங்கிகள்‌, காப்பீட்டு நிறுவனங்கள்‌, தகவல்‌ தொழில்‌ நுட்ப நிறுவனங்கள்‌ போன்றவற்றில்‌ பணிபுரிவோர்‌, வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

* மின்னணு சேவை காலை 08.00 மணி முதல்‌ மாலை 06.00 வரை இயங்கலாம்‌.

* உணவகங்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ 10.00 மணி வரையிலும்‌, நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ மதியம்‌ 3.00 மணி வரையிலும்‌, மாலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரையிலும்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படுகிறது.

* பெட்ரோல்‌, டீசல்‌ பங்க்குகள்‌ வழக்கம்‌ போல்‌ இயங்கும்‌

* ஏடி.எம்‌. மற்றும்‌ அவற்றிற்கான சேவைகள்‌ அனுமதிக்கப்படும்‌. வேளாண்‌ விளை பொருட்கள்‌ மற்றும்‌ இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்‌

* சரக்கு வாகனங்கள்‌ செல்லவும்‌, அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கொண்டு செல்லவும்‌ அனுமதிக்கப்படும்‌.

* உரிய மருத்துவக்‌ காரணங்கள்‌ மற்றும்‌ இறப்புகளுக்காக மட்டும்‌ உரிய மருத்துவக்‌ காரணங்கள்‌ மற்றும்‌ இறப்புகளுக்காக மட்டும்‌ மாவட்டம்‌ விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌

* மருத்துவக்‌ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள்‌ பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

* செய்தி மற்றும்‌ ஊடக நிறுவனங்கள்‌ வழக்கம்‌ போல்‌ இயங்கலாம்‌.

*. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர்‌ செயல்முறை தொழிற்சாலைகள்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌, மருத்துவ உபகரணங்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌

* மால்கள்‌ திறந்திட அனுமதி கிடையாது.

பொது மக்கள்‌ நலன்‌ கருதி, இன்று (22-5-202] இரவு 9-00 மணிவரையிலும்‌, நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள்‌ மட்டும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 மணி வரை அனைத்துக்‌
கடைகளும்‌ திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

* வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ நலன்‌ கருதி, இன்று (22.05.2027) மற்றும்‌ நாளை (23.05.2027) தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்துகள்‌ வெளியூர்‌ செல்வதற்கு அனுமதிக்கப்படும்‌.