வருமான வரித்துறை சோதனை: சென்னை ஐகோர்ட்டில் கதிர் ஆனந்த் முறையீடு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று மீண்டும் துரைமுருகன் மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் துரைமுருகன், கதிர் ஆனந்த் முறையீடு செய்துள்ளார். இந்த முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக இந்த வருமான வரி சோதனைகளுக்கு சட்டமன்றத்தில் முதல்வர் பழனிச்சாமி பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply