வருமானம் இல்லை, அதனால்தான் கடன்: பிரேமலதா விளக்கம்
விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டுவிட்டது எனவே வருமானம் இல்லாததால் தான் கடனாகிவிட்டது என பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
பொறியியல் கல்லூரியை மேம்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டதாகவும், இந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்போம் என்றும் கூறிய பிரேமலதா, ‘ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு, இந்தியா என அனைத்துமே கடனில்தான் ஓடிக்கொண்டிருப்பதாகவும், கடன் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்றும் பிரேமலதா கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.