வருத்தம் தெரிவித்துள்ளார் கிரண்பேடி : ராஜ்நாத் சிங் தகவல்
தமிழக தண்ணீர் பிரச்சினை தொடர்பான தனது கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்துள்ளதாக இன்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு கிரண்பேடி பதில் அனுப்பி உள்ளதாகவும் அந்த பதிலில் தமிழக தண்ணீர் பிரச்சினை தொடர்பான தனது கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுவை கவர்னர் கிரண்பேடி தமிழகத்தின் தண்ண்ணிர் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.