வனிதா விஜயகுமாரிடம் 2 மணி நேரம் விசாரணை செய்த போலீஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமாரிடம் அவரது மகள் ஜோவிதா கடத்தல் வழக்கு தொடர்பாக 2 மணி நேரத்திற்கும் மேலாக தெலங்கானா போலீசார் விசாரணை செய்து வருகின்றானர்.
சென்னை செம்பரம்பாக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள வீட்டில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஒருவேளை வனிதா கைது செய்யப்பட்டால் அதுகுறித்த காட்சிகள் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருமா? என்பதே பலரது கேள்வியாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.