வடபழனி ஃபோரம் விஜயா மாலில் ‘2.0’ படப்பிடிப்பு
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் டெல்லி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள ஈவிபி தீம் பார்க்கில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் எமிஜாக்சன், அக்சயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் ரகசியமாக சென்னை வடபழனி ஃபோரம் விஜயா மாலில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மெயின் வில்லன் நடிகர் அக்சயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிகாலை நேரத்தில் இந்த படப்பிடிப்பு நடந்ததால் அந்த பகுதி மக்களுக்கு கூட தெரியாமல் ரகசியமாக முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.