புதிய தகவல்

நேற்று மறைந்த கன்னியாகுமரி எம்.பி எச்.வசந்தகுமார் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள எச்.வசந்தகுமார் உடல் சற்றுநேரத்தில் தி. நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது

வசந்த் அண்ட் கோ ஊழியர்களும், உறவினர்களும் வசந்தகுமாரின் வீட்டில் அஞ்சலி செலுத்த கூடியுள்ளனர். இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சொந்த ஊருக்கு எச்.வசந்தகுமார் உடல் கொண்டு செல்லப்படுகிறது. சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நாளைய தினம் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply