வங்கக்கடலில் நிலநடுக்கம்: தி.நகரில் உணரப்பட்டடால் பரபரப்பு
சென்னை அருகே வங்கக்கடலில் இன்று காலை 7 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1ஆக இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
வங்கக்கடலில் சென்னையில் இருந்து 600 கிமீ தூரத்தில் 10 கிமீ ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தை திநகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ளவர்கள் உணர்ந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.