லாஸ்வேகாஸ் தாக்குதல்: உயிர் இழப்பதற்கு சில நொடிகளுக்கு முன் இளம்பெண் அனுப்பிய காதல் எஸ்.எம்.எஸ்
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்குப் பிறகு நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ’மேண்டலே பே’ என்ற ஹோட்டல் அருகே நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் வயிற்றில் குண்டடி பட்டு இறந்த ஜான் லம்போர்னே என்ற பெண் தன் கணவர் மனிடோபாவுக்கு உயிர் துறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். “நான் உங்களை நேசிக்கிறேன்”, “நான் ஒரு துப்பாக்கிச் சூட்டில் மாட்டிக்கொண்டேன்.”, “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று அவர் தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பவிட்டு இறந்திருக்கிறார்.
இறந்த பெண்ணின் கணவர் தனது மனைவியின் மெசேஜைப் பார்த்துவிட்டு தாளமுடியாத துயரத்தில் வீழ்ந்துவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். உயிர் பிரியும் தருவாயிலும் தன் கணவரின் மீதான அன்பை வெளிப்படுத்திய அந்த பெண்ணைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாக வைரலாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.