லாஸ்வேகஸ் துப்பாக்கி சூடு: கொலையாளியின் காதலி சிக்கினார்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கில் மேற்படி துப்புகல் கிடைக்காமல் அமெரிக்க போலீசார் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் கொலையாளியின் அறையில் தீவிர சோதனை நடத்தியதில் அவனுக்கு ஒரு காதலி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கொலையாளியுடன் வசித்து வந்த மாரிலோ டான்லே என்பவர் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது பிலிப்பைன்சில் இருந்ததாகவும், தற்போது நாடு திரும்பியுள்ள அவரிடம் அமெரிக்க போலீசார் துருவி துருவி விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாரிலோ கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் பணிக்காக சென்று, அங்கே குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.