லாஸ்லியாவுக்கு இதுபோதும்! இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியா, இலங்கையில் இருந்து இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்தவர் என்பதும், அவர் தனது தந்தையை பத்து வருடங்களாக பார்க்காமல் இருந்து வருபவர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். பத்து வருடங்களாக பார்க்காமல் இருந்த தந்தையை பார்த்தபின்னர் லாஸ்லியாவால் தாங்க முடியவில்லை. இன்ப அதிர்ச்சியில் தந்தையை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து சேரன் உள்பட அனைவரும் ஆனந்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியால் பணம், புகழ் மற்றும் சினிமா வாய்ப்புகள் வருகின்றதோ இல்லையோ? பத்து வருடங்களாக நேரில் பார்க்காத தந்தையை அவர் இன்று பார்த்துவிட்டார். அவருக்கு இது போதும் என்பதும் பிக்பாஸ் குழுவினர் செய்த உருப்படியான விஷயங்களில் இதுவும் ஒன்று என்றும் கருதப்படுகிறது
#Day80 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/E6ue8NYw1m
— Vijay Television (@vijaytelevision) September 11, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.