பரபரப்பு தகவல்
ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த லாரியின் டயர் திடீரென வெடித்ததால் அந்த பெட்ரோல் பங்க் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இன்று லாரி ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காக வந்து நின்றது
பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அந்த லாரிக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் லாரி டயர் வெடித்தது
இதனால் அந்த பெட்ரோல் பங்க் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.