லஞ்சம் வாங்கி முறைகேடாக சான்றிதழ் வழங்கிய புகார்: காமராசர் பல்கலையில் மூவர் சஸ்பெண்ட்
மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தொலைநிலை கல்வியில் 2014 – 15ம் ஆண்டில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியதாக புகார்கள் எழுந்தது. இந்த புகார்கள் குறித்து கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் இதுகுறித்து முடிவெடுக்க பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் கூடியது
இந்த கூட்டத்தில் புகார் சுமத்தப்பட்ட மதுரை காமராசர் பல்கலைகழக கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கணினி ஆபரேட்டர் கார்த்திகை செல்வன் ஆகியோர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.