shadow

ரேஷன் கார்டு இல்லாமல் மண்ணெண்ணெய்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடந்த 16ஆம் தேதி டெல்டா பகுதியை கடுமையாக கஜா புயல் தாக்கிய நிலையில் இந்த புயலால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை தொலைத்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சிதாராமன், நேற்று கஜா புயல் பாதிப்படைந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். டெல்டா பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என நேற்று அறிவித்த அமைச்சர், இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி புயல் பாதித்த ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 மையங்களில் நாளை மாலை மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்றும் இந்த மண்ணெண்ணெயை அந்த பகுதி பொதுமக்கள் ரேசன் கார்டு இல்லாமல் தனியாக மண்ணெண்ணெய் வாங்கலாம் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply