ரூ.1000 ரிஜிஸ்ட்ரேஷன், ரூ.1500 மற்ற சேவைகள்: ஸ்பாவில் நடந்த விபச்சாரம் அதிர்ச்சி தகவல்

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் என்ற நகரில் நடைபெற்று வந்த ஸ்பா ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக கேள்விப்பட்டு போலீசார் திடீர் ரெய்டு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் என்ற பகுதியில் புகழ்பெற்ற ஸ்பா ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்பாவில் முறை கேடான விஷயங்கள் நடப்பதாகவும் விபச்சாரம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் குழு ஒன்று திடீரென அந்த ஸ்பாவில் ரெய்டு நடத்தினர். அப்போது ஸ்பாவில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஸ்பாவின் மேனேஜர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து நடந்த விசாரணையில் இந்த ஸ்பாவிற்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணமாக ரூபாய் 1000 கட்ட வேண்டும் என்றும் அதன் பின்னர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண்களில் யாராவது ஒருவரை அவர் மசாஜ் செய்வதற்காக தேர்வு செய்யலாம் என்றும் அதனை அடுத்து ரூபாய் 1000 முதல் 1500 வரை மற்ற சேவைகளுக்கு கட்டணம் பெறப்படும் என்றும் தெரிய வந்தது. இந்த மற்ற சேவை என்பதில் விபச்சாரமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வாறு ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கிலும், ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கிலும் இந்த ஸ்பா நிறுவனம் சம்பாதித்து வந்ததாகவும் தற்போது இந்த ஸ்பாவின் மேனேஜர் உள்பட ஊழியர்கள் அனைவரும் கம்பி எண்ணிக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

Leave a Reply