shadow

ரிலையன்ஸ், ஏர்செல் இணைப்புக்கு பங்குச் சந்தைகள், ‘செபி’ ஒப்புதல்

ரிலையன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் இணைப்புக்கு பங்குச் சந்தைகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ), தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகிய பங்குச் சந்தை கள் ஒப்புதல் வழங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு (என்சிஎல்டி) விண்ணப்பிக்க வேண்டும். இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கு மாறு கோர வேண்டும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

இணைப்பில் உருவாகும் நிறு வனத்தில் ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், ஏர்செல் லமிடெட் ஆகிய நிறுவனங்கள் சம அளவிலான பங்குகளை அதாவது தலா 50 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தொலைத் தொடர்புத்துறை சேவையில் 4-வது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்த ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதாக அறிவித்தது. ஏர்செல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடியாகும். நிகர மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.

இரு நிறுவனங்களும் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கும். புதிய நிறுவனத் துக்கு தலா ரூ.14 ஆயிரம் கோடி கடனை மாற்றும். இதனால் புதிய நிறுவனத்தின் கடன் ரூ.28 ஆயிரம் கோடியாக இருக்கும்.

இரு நிறுவனங்களும் இணை வதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.20 ஆயிரம் கோடியாகக் குறையும். இதேபோல ஏர்செல் நிறுவன கடன் சுமை ரூ.4 ஆயிரம் கோடியாகக் குறையும்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எண்ணிக்கை யிலானோர் செல்போன் பயன் படுத்துகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு அந்நிறுவன போட்டியைச் சமாளிக்க நிறுவனங்கள் இணை வது இத்துறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

கடந்த மாதம் பார்தி ஏர்டெல் நிறுவனம் நார்வேயின் இந்தியப் பிரிவு நிறுவனமான டெலிநாரை கையகப்படுத்துவதாக அறிவித் தது.

இதேபோல வோடபோன் இந்தியா நிறுவனம் பிர்லா குழு மத்தின் ஐடியா நிறுவனத்துடன் இணைவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

Leave a Reply