shadow

ராயபுரம் குக்கர் கடையில் வருமான வரித் துறை, தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஒருபக்கம் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டும், இன்னொரு பக்கம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முறைகேடுகளை தவிர்க்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டும் உள்ளனர்.

இந்த நிலையில் ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் வருமான வரித் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் அளித்துள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனை

குக்கர் சின்னம் பெற்ற டிடிவி தினகரன் குக்கருக்கு டோக்கன் வழங்குவதாகவும், அந்த குக்கரில் பணமும் வைத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருவதாக வந்த தகவல் அடிப்படையில் ராயபுரத்தில் உள்ள பாத்திரக் கடையில் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply