ராமர் கோவில் கட்டுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: துணை முதல்வர் அதிரடி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் கேஷவ் புரசாத் மவுரியா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேசம் மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியா, ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை பா.ஜ.க. முன்னரும் ஆதரித்தது. இப்போதும் ஆதரிக்கிறது. எப்போதும் ஆதரிக்கும்.
அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படும். அதற்கான வேளைவந்து ராமர் கோவில் கட்டப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.