ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கலா? பெங்களூரு போலீசார் கடிதம்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் தமிழக போலீசாருக்கு பெங்களூரு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply