ராபர்ட் வதேரா அலுவலகத்தில் சோதனை: மூட்டை மூட்டையாக கிடைத்த ஆவணங்கள்
சோனியாகாந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா அலுவலகத்தில் நேற்று அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பீகானிர் என்ற பகுதியில் நடந்த நில விற்பனை ஒன்றின்போது சட்ட விரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறையினர் சமீபத்தில் வழக்குபதிவு செய்தனர்.
இது குறித்து விசாரணை செய்ய ராபர்ட் வதேராஅவுக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்தினர்.
அவரது, நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர்களின் அலுவலகங்களிலும் சோதனை நடந்ததாக தெரிகிறது.. சோதனையின் முடிவில் மூட்டை மூட்டையாக அமலாக்கத் துறையினர் ஆவணங்களை, எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.