ராஜ்நாத்சிங், யோகி ஆதித்யநாத் ஆகியோர்களை சந்தித்த பில்கேட்ஸ்
உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், தொழில்முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பில்கேட்ஸ் அவருடன் இந்தியாவில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
மேலும், கடந்த இந்தியாவின் பொதுச் சுகாதாரம் என்ற அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம், கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசால் ரத்துசெய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்குபவர்களில் பில்கேட்ஸும் ஒருவர். இதுதொடர்பாக, ராஜ்நாத் சிங்கிடம் பில்கேட்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ராஜ்நாத்சிங்கை அடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பில்கேட்ஸ் சென்று சந்தித்தார். யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.