‘ராஜா’வை வெளியேற்றிவிட்டு மீண்டும் இடம்பிடித்த ‘பேட்ட-விஸ்வாசம்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் ஏமாற்றியது. சிம்புவின் சுயபுராணம், தனக்குத்தானே புகழ்ந்து கொள்ளும் வசனங்கள், மொக்கையான பஞ்ச் டயலாக்குகள், சுமாரான திரைக்கதை ஆகியவைகளால் படம் படுதோல்வி அடைந்தது.
வெள்ளியன்று வெளியான இந்த படம் திங்கட்கிழமை கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்பட்டு மீண்டும் ‘பேட்ட’ மற்றும் விஸ்வாசம்’ படங்கள் திரையிடப்பட்டன.
மேலும் இன்று சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு 2’ படம் ரிலீஸ் ஆவதால் கிட்டத்தட்ட இந்த படம் வாஷ் அவுட் என்றே கருதப்படுகிறது. சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நடிகர்களே அடக்கி வாசிக்கும் நிலையில் சிம்பு தற்புகழ்ச்சியை விரும்பாமல் ‘செக்க சிவந்த வானம்’ போல் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.