shadow

ராஜஸ்தான் சாலையில் ஆறாக ஓடிய பீர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் பீர் பாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் மோதியதால் அந்த லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் நொறுங்கி சாலையில் பீர் ஆறாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் மற்றும் அஜ்மீர் இடையிலான சுங்கச்சாவடி ஒன்றில் பல வாகனங்கள் வரிசையாக நின்று சுங்கவரி செலுத்தி கொண்டிருந்தன.

அப்போது வேகமாக வந்த பீர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வரிசையாக நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதால் அதில் உள்ள பீர் பாட்டில்கள் நொறுங்கி சாலையில் கொட்டியது.

இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply