ராகுல்-ரஞ்சித் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலை குறித்து பேச்சா?
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை நேற்று டெல்லியில் இயக்குனர் ரஞ்சித் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நடிகர் கலையரசனும் இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில், ‘ரஞ்சித்திடம் சினிமா, அரசியல் குறித்து விரிவாக பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலைக்கு தங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் ராகுல் காந்தி, ரஞ்சித்திடம் கூறியதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ராகுல்காந்தியை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் சமீபத்தில் சந்தித்த நிலையில் தற்போது தலித் மக்களுக்காக போராடி வரும் ரஞ்சித்தும் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
I met film director P A Ranjith the man behind blockbuster films like Madras, Kabali and Kaala and actor Kalaiyarasan, in Delhi yesterday. We talked about politics, films and society. I enjoyed the interaction and look forward to continuing our dialogue. pic.twitter.com/KJOmfICkyJ
— Rahul Gandhi (@RahulGandhi) July 11, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.