ராகுல்-பிரியங்காவின் தமிழக பிரச்சார தேதி!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் வரும் ஏப்ரல் 2வது வாரத்தில் வருகை தர உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் வேட்பாளர்களும், தொண்டர்களும் உற்சாகமாகியுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், ஏப்ரல் 2-வது வாரம் அவரது பிரசாரம் இருக்கும் என்றும், விரைவில் சரியான தேதி முடிவாகும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ராகுல், பிரியங்கா இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இருவரும் பல்வேறு மாநிலங்களில் 18 பேரணிகளில் பங்கேற்பார்கள் எனவும் காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.

Leave a Reply