ராகுல்காந்தி வீட்டின் முன் தர்ணா செய்யும் முன்னாள் பெண் முதல்வர்
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்ய கூடாது என வலியுறுத்தி அவரது வீடு முன்பு முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து ஷீலா தீட்சித் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் இல்லத்திற்கு அருகே நாங்கள் தர்னா போராட்டம் நடத்த போகிறோம். அவர் ராஜினாமா செய்யக் கூடாது என எங்களது உணர்ச்சிகளை காட்டுவோம். நாம் விரும்பாத மிகப் பெரிய இழப்பு கட்சிக்கு ஏற்படும். இதை செய்ய வேண்டாம் என நாங்கள் அவரிடம் வேண்டுகோள் விடுப்போம் என ஷீலா தீட்சித் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.