கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் பாடுபடும் என தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் எதார்த்த அணுகுமுறையின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு நடக்கும் என்றும், மற்ற விஷயங்களை விட கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே விருப்பம் என்றும் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் என்றும் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.