ரயில்வேயின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன் தபால்துறை தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோது திமுக உள்பட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து மாநில மொழிகளிலும் தபால்துறை தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரயில்வே துறையினர்களின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களத்தை மீண்டும் அமைத்திட வேண்டாம் என முக ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Leave a Reply