ரபேல் விவகாரம் குறித்து ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா
இன்று சுப்ரீம் கோர்ட் ரபேல் விவகாரம் குறித்து அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு சரிதான் என்றும், முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய அவசியம் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரபேல் விவகாரம் குறித்துதான் அதிகம் பேசி பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்
எனவே ரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தற்காக காங். தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.