ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ரஞ்சித்தை கைது செய்ய தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்றைய விசாரணையின்போது மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது

முன்னதாக ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply