shadow

ரஜினியின் 2வது மகளுக்கு 2வது திருமணமா?

ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி என்பவருடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்தின் 2வது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்து அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்று கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான்.

அஸ்வினுக்கு ஏற்கனவே 2வது திருமணம் நட்நது முடிந்துவிட்ட நிலையில் தற்போது தனது மகனுடன் பெற்றோருடன் வசித்து வரும் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில் எம்.பி.ஏ., முடித்த விசாகன், தமிழகத்தில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அத்துடன் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

குடும்பத்தினரது சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply