ரஜினிகாந்த் ஆஜராக சம்மன்: சீமான் காரணமா?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேரணியில் சமூகவிரோதி நுழைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாகவும் அவருக்கு சமூகவிரோதிகள் நுழைந்த தகவல் தெரியும் என்றும் அதனால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்
இந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் தற்போது ரஜினிகாந்த் மீது விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.